follow the truth

follow the truth

April, 28, 2025
Homeஉள்நாடுஅருவக்காலு குப்பைத் திட்ட செயற்பாடுகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்

அருவக்காலு குப்பைத் திட்ட செயற்பாடுகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்

Published on

அருவக்காலு குப்பைத் திட்டம் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்தார்.

முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

அருவாக்காலு குப்பைத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் நேற்று (23) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரச அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தாமதங்கள் மற்றும் தவறுகளினால் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு திரும்ப வராமல் போகலாம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி மற்றும் சீனாவின் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து அருவாக்காலு குப்பை கிடங்கின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அந்த நாடுகளுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் அது பாதிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொழும்பு நகரின் திண்மக் கழிவுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புத்தளம், அருவாக்காலு பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கல்லில் இருந்து இடித்து அகற்றப்பட்ட கைவிடப்பட்ட குழிகள் தொடர்பாக சுகாதார கழிவுகளை அகற்றும் வசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற வசதிகளை நிர்மாணிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப் ஒப்படைக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் புத்தளத்தில் 02 கழிவுப் பரிமாற்ற நிலையங்களை நிர்மாணிப்பதும் அது தொடர்பான புகையிரத உட்கட்டமைப்பு மற்றும் வீதி அமைப்பும் இதன் கீழ் இடம்பெறுகிறது.

பொதுவாக, கொழும்பு நகரில் மாத்திரம் தினமும் 600 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. களனி பகுதியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து புகையிரதத்தில் அருவக்காலு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதார அமைப்பில் சேமிக்கப்படும்.

அருவக்காலு பகுதியில் 265 ஏக்கர் பரப்பளவில் இந்த சுகாதாரமான குப்பை கொட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் பல ஏக்கர் பூங்காவாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அழகுபடுத்தப்பட்டிருப்பதும் சிறப்பு.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான...

மியன்மார் சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

மியன்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக...

உயர்தர பரீட்சையின் மீளாய்வுக்கான விண்ணப்பம் கோரல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம்...