follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

Published on

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் டிசம்பர் மாதமளவில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தொகை தற்போது 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 2 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்றன.

இது வழமையாகக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளை விடவும் 40 சதவீத வீழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கெப்பிட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 75 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்குள்ள வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலை தொடருமாயின் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...