follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுமரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

Published on

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் டிசம்பர் மாதமளவில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தொகை தற்போது 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 2 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்றன.

இது வழமையாகக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளை விடவும் 40 சதவீத வீழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கெப்பிட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 75 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்குள்ள வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலை தொடருமாயின் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...