follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுகளுத்துறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு

Published on

களுத்துறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி இன்று (18) உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கடந்த 14ஆம் திகதி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள வார்டு இலக்கம் 3 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த கைதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4 நாட்களில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை வடக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவின் பணிப்புரைக்கு அமைய பல்வேறு முறைப்பாடுகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...