follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசீன நிறுவனத்தின் இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை ஆராயும் சட்டமா அதிபர் திணைக்களம்

சீன நிறுவனத்தின் இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை ஆராயும் சட்டமா அதிபர் திணைக்களம்

Published on

சீனாவில் இருந்து சேதன பசளையை இலங்கைக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனம், தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்திடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க  டொலர்களை கோரி இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது.

இந்த இழப்பீட்டு கோரிக்கை கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்கப்படாத நிலையில், அக்கடிதம் தொடர்பிலும், அதன் சட்ட நியாயாதிக்கம் தொடர்பிலும் சட்ட மா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக திணைக்களத்தின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தின் அலட்சிய நடவடிக்கையால், தமது நிறுவனத்தின் நற் பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக இந்த  தொகையை குறித்த நிறுவனம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட் கிழமை அனுப்பட்டுள்ள இந்த கடிதம்,தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தின் பணிப்பாளர் ஊடாக மேலதிக சட்ட அலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...