follow the truth

follow the truth

September, 26, 2024
Homeஉள்நாடுகொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

Published on

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை 28 மணித்தியாலங்களுக்கு இடை நிறுத்தவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை மேற்படி நீர்விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 04, 05, 06, 07, 08 மற்றும் கோட்டை, கடுவல ஆகிய மாநகர சபை பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலேயிலிருந்து கோட்டை வரையான நீர் குழாயில் மேற்கொள்ளப்பட்டவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் முன்கூட்டியே தேவையான அளவு நீரை சேமித்துக்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால்...

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...