follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1இருபது - 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இருபது – 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Published on

ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

20-20 போட்டிகளுக்கான இருபத்தி இரண்டு பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு விளையாட்டு அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

20-20 அணிக்கு வனிந்து ஹசரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை 20-20 அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

பானுக ராஜபக்ஷ, பினுர பெர்னாண்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோரும் 20-20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 20-20 தொடருக்கான இலங்கை அணி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வனிந்து ஹசரங்க
சரித அசலங்க
பெதும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
தசுன் ஷானக
ஏஞ்சலோ மேத்யூஸ்
தனஞ்சய டி சில்வா
மகேஷ் தீக்ஷனா
நுவன் துஷார
குசல் ஜனித்
பானுக ராஜபக்ஷ
கமிந்து மெண்டிஸ்
மதீஷ பத்திரன
துனித் வெள்ளாலகே
அகில தனஞ்சய
ஜெஃப்ரி வாண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
பினுர பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்
தில்ஷான் மதுஷங்க மற்றும்
துஷ்மந்த சமிர

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...