follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1களுத்துறை சிறைச்சாலையின் மூன்றாவது கைதியும் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையின் மூன்றாவது கைதியும் உயிரிழப்பு

Published on

களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் உயிரிழந்த மூன்றாவது கைதி நேற்று (28) பிற்பகல் உயிரிழந்துள்ளதாகவும், அதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான டபிள்யூ.ஏ.பந்துல என்ற 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...