பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சம்பங்களுடன் தொடர்புடைய பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 200 மில்லியன் ரூபாய் வரை அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.