பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சந்தேக நபர் வெலிக்கடை, ராஜகிரிய, பெலவத்த மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சந்தேக நபர் வர்த்த நிலையமொன்றுக்கு சென்றுவந்துள்ளமை அங்கிருந்த CCTV கமராக்களில் பதிவாகியுள்ளன.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்-
071- 8591762
071- 8594921
071- 8594913
பொதுமக்கள் உதவி தேவை : தேடுகிறது பொலிஸ்https://t.co/yObKx4SCDE#Dailyceylon #lka #SriLanka pic.twitter.com/l5ooWj2DEm
— Daily Ceylon (@dailyceylon) November 11, 2021