follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் 10 நாடுகள்

செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் 10 நாடுகள்

Published on

யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அஞ்சி பல கப்பல் நிறுவனங்களும் செயற்பாடுகளை இடைநிறுத்திய நிலையில் செங்கடல் வர்த்தகப் பாதையை பாதுகாப்பதற்கு பன்னாட்டு படை நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது.

பத்து நாடுகளைக் கொண்ட பன்னாட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளும் இணைந்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்த கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் 15 ஆளில்லா விமானங்களை தமது போர் கப்பல்கள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூறிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காசா போர் தொடக்கம் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புபட்ட கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை பெரும் எண்ணெய் நிறுவனமான பி.பீ. செங்கடல் வழியான தனது எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...