follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுமீண்டும் முடக்கமா ? : அச்சுறுத்தும் சுகாதாரத் துறை

மீண்டும் முடக்கமா ? : அச்சுறுத்தும் சுகாதாரத் துறை

Published on

கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் குறையாத நிலையில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமானது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்குமாறு பரிந்துரை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடுமையாக கடைப்பிடிக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் பொதுமக்களின் போராட்டங்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சுகாதார வழிகாட்டுதல்கள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை எனவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் ஒரே நாளில் அதிகளவானோருக்கு கொரோனோ தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இன்று (25) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...