புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார்.
ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற தாவரங்கள் பெருகியதே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கிராமப்புற யானைக்கால் நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் தற்சமயம் கிராமப்புற யானைக்கால் நோயே அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.