follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1காஸாவில் பசி அதிகரித்து வருகிறது

காஸாவில் பசி அதிகரித்து வருகிறது

Published on

காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இதனை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர், பத்தில் ஒன்பது பேருக்கு தினசரி உணவு கூட கிடைக்காத நிலை காணப்படுவதாகக் கூறுகிறார்.

காஸா பகுதிக்கு தேவையான உணவு உதவிகளில் பாதி கூட அதை சென்றடைவதில்லை எனவும், அதற்கு உணவு அனுப்பவே முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் 17,700 பேர் இறந்துள்ளனர், அங்கு வசிக்கும் 2.3 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, ஹமாஸ் அமைப்பினால் பிணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் விடுவிக்கக் கோரி டெல் அவிவ் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...