பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான எண்ணக்கருப் பத்திரம், குறித்த தரப்பினருடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டு வருவதுடன், உண்மை, நிலைமாறுகால நீதி, நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான மேலதிக கருத்துகளைப் பெற்றுக்கொள்ளல் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.