மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்திலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து இலங்கை கரையை அண்மித்து மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்கின்றது.
இதன் காரணமாக நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.