இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு வரும் சூழலை உலகத்திற்கு எடுத்து சொல்லும் விதமாக முழங்கால் அளவு ஆழம் கொண்ட கடல் நீரில் நின்றபடி பேசி தனது வீடியோவை இந்த மாநாட்டில் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் தங்கள் நாடு காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வரும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 200 நாடுகளில் 24,000இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.