follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகதிர்காமம் ஆலயத்திலிருந்து 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மாயமானது

கதிர்காமம் ஆலயத்திலிருந்து 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மாயமானது

Published on

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கதிர்காமம் ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட 38 பவுண் தங்க தட்டு காணாமல் போனமை தொடர்பில் அங்கொட லொக்காவின் மனைவியிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அங்கொட லொக்காவின் மகனின் தோஷத்தை போக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கதிர்காமம் ஆலயத்திற்கு குறித்த தங்க தட்டு காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...