follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இந்தியாவிலிருந்து சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக, அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், இந்தியாவில் இருந்து 50000 மெற்றிக் தொன் சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 10-12 திகதிக்குள் இந்த சம்பா அரிசியை லங்கா சதொச, கூட்டுறவு மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக நுகர்வோருக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான சம்பா அரிசியை வழங்குவதே சம்பா அரிசியை இறக்குமதி செய்வதன் நோக்கமாகும் என்றும் சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

சந்தையில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில வியாபாரிகள் சம்பா அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...