சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் வேன் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று (09) காலை சிலாபம் கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சந்தேகநபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.