பொஹொட்டுவவை விட ஜனாதிபதியுடன் சதி செய்தவர்கள் நாங்கள்தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி காலை, மதியம், மாலை என என்ன கூறுகின்றார் என்பது எமக்குத் தெரியும் எனவும் மரிக்கார் தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் இருந்து வேலை வாங்க முடியாது என தெரிவித்த மரிக்கார், அவரிடமிருந்து வேலை வாங்கும் வழி தனக்கு நன்றாக தெரியும் எனவும் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.