follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுமூன்று சிறுமியரைக் காணவில்லை : கண்டறிய உதவுங்கள்

மூன்று சிறுமியரைக் காணவில்லை : கண்டறிய உதவுங்கள்

Published on

கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று (08) காலை 10 மணி முதல் இந்த சிறுமியர் கொழும்பில் சில இடங்களுக்குச் சென்றுள்ளதாக குறித்த சிறுமியரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 – 9.30 மணியளவில் ராஜகிரிய பிரதேசத்தில் இவர்களைக் கண்டதாக குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்

இவர்கள் மூவரும் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் பரப்பப்படுகின்ற போதிலும், இந்தத் தகவல் போலியானது என உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில்...

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்...