தனது வாழ்நாள் முழுவதும் போராடிய போதும் கொழும்பு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.
எனவே இவ்வருட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு நிரந்தர உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நீண்டகாலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு அரசாங்கங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவ்வருட வரவு செலவு திட்ட யோசனைக்கு ஆதரவை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாராகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.