உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக பொலித்தீன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.
சந்தையில் தொடர்ந்தும் சீமெந்து மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், சீனி மற்றும் அரிசியின் விலைகள் கட்டுப்பாடின்றில் உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான நிலையில், பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.