follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுசீரற்ற காலநிலை - 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை – 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Published on

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும 24 மணிநேரத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்படுகின்றன.

வட மாகாணத்திலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், தற்காலிகமான கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...