இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இரண்டாம் குழுவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் போட்டி இன்று (07) இடம்பெறவுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, அபுதாபியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாம் குழுவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணி, 4 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.
தோல்வியடைந்தால், அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை நியூஸிலாந்து அணி இழக்க நேரிடும்.
இதேநேரம், நமீபியா அணியுடன் நாளைய தினம் இடம்பெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றால், நிகர ஓட்ட வீதத்தின் அடிப்படையில், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைக்கும்.