follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஞானசாரரின் செயலணி ஒற்றுமையை குலைக்கும் - ஐ.தே.க

ஞானசாரரின் செயலணி ஒற்றுமையை குலைக்கும் – ஐ.தே.க

Published on

நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் செயற்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் கருத்துப்படி, எந்தவொரு புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் அதன் பின்னர், நீதி அமைச்சின் மற்றும் குறிப்பாக சட்டமா அதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி செயலணியில் தங்கியிருக்காமல், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது சட்டமா அதிபர் ஜனாதிபதியிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என ஐ.தே.க அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செயலணியொன்றை நியமித்து, அமைச்சரவையில் விவாதிக்காமல், நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் அதிகார வரம்பில் இருந்து நீக்கும் நடவடிக்கை “கேலிக்குரியது” என்றும் ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு முரணான செயல் என ஐ.தே.கட்சி அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உடனடியாக இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோருகின்றோம் என ஐ.தே.க தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...