ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமின் வீட்டின் மீது இன்றையதினம் ட்ரோன் மூலமான தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
குறித்த தாக்குதலின் மூலம் தனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, விசாரணைக்கு தனது உதவியை வழங்க முன்வந்துள்ளது.
“இந்த வெளிப்படையான பயங்கரவாத செயல், நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இது ஈராக் அரசின் இதயத்தை நோக்கி செலுத்தப்பட்டது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.