follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1கொழும்பில் நேற்று விழுந்த மரம் அபாயமான மரங்கள் பட்டியலில் இல்லையாம்

கொழும்பில் நேற்று விழுந்த மரம் அபாயமான மரங்கள் பட்டியலில் இல்லையாம்

Published on

கொழும்பு பிரதேசத்தில் அபாய நிலையில் உள்ள சுமார் 300 மரங்கள் அடங்கிய ஆவணம் தமக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அந்த ஆவணத்தின் பிரகாரம் உரிய மரங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

பேராதெனிய தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு தாவர நிபுணர் உள்ளிட்ட குழுவினரால் தினமும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

கொள்ளுப்பிட்டியவுக்கும் பம்பலப்பிட்டியவுக்கும் இடையிலான டூப்ளிகேஷன் வீதியில் நேற்று மாலை மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்துள்ளது.

இதனால் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த மரம் ஆபத்தானது என அடையாளம் காணப்படவில்லை என கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...