follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉலகம்தீபாவளியைத் தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தில்

தீபாவளியைத் தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தில்

Published on

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பட்டாசு வெடிக்க டெல்லியில் தடை இருந்த போதும், தீபாவளியன்று டெல்லி நகரம் முழுக்க பரவலாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். அது டெல்லி நகரத்தின் காற்று மாசுபாட்டை மேலும் மோசமாக்கியது.

வாகன மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் உமிழ்வுகள், தூசு, கடுமையான வானிலை போன்ற பல காரணிகளால், உலகிலேயே மிகுந்த காற்று மாசுபாடான நகரமாக டெல்லி இடம்பிடித்துள்ளது

இந்திய அரசின் காற்றுத் தர கண்காணிப்பு அமைப்புகளின் கணக்குப் படி, வெள்ளிக்கிழமை, டெல்லியின் சில பகுதிகளில் ஆபத்தான காற்று மாசுபாடு 999ஆக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன. இது தான் காற்று மாசுபாட்டை கணக்கிட வைக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தான் உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு பிரச்சினை உள்ளது. உலக அளவில் அதிகம் காற்று மாசுபாடு கொண்ட 30 நகரங்களில் 22 நகரம் இந்தியாவில்தான் உள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு மேல் நச்சுத்தன்மை கொண்ட காற்றால் உயிரிழக்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகின்ற தற்போது 41 நாடுகளை சேர்ந்தவர்கள்...

‘ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி’ – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் கடந்த மார்ச் 11 கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும்...

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு...