பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,862 ஹெக்டேயர் காணியை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய உத்தரவுவிடுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன் பிரதிவாதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேச செயலாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.