follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுபயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் - இருவர் கைது

பயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் – இருவர் கைது

Published on

சப்புகஸ்கந்த பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 42 வயதான பாத்திமா முன்தாஸ், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த குறித்த பெண், கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவரால் தனது மனைவி காணாமற்போயுள்ளதாக கடந்த 28 ஆம் திகதி புளூமென்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...