follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்பிரஸ் பேர்ள் - கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களை கரைக்கு கொண்டு வர நடவடிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் – கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களை கரைக்கு கொண்டு வர நடவடிக்கை

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்கள் உள்ளிட்ட சுமார் 400 சிதைந்த பொருட்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடற்படையும் நாரா நிறுவனமும் இணைந்து கடலின் ஆழத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள், எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்தால் பெயரிடப்படும் உள்நாட்டு நிறுவனத்தால் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த கொள்கலன்களை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படவுள்ள கப்பலொன்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலுக்கு பொறுப்பான நிறுவனத்தினால் குறித்த கப்பல் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகார சபை கூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான...

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...