follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுவெலிசர விபத்து - தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

Published on

நேற்றைய தினம் வெலிசர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பகுதியில் நேற்று (04) கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிளையும் முச்சக்கரவண்டியொன்றையும், கார் ஒன்றையும் மோதி விபத்துக்குள்ளாக்கியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்தனர்.

விபத்துக்கு காரணமான அதிசொகுசு காரை செலுத்திய 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதுடன், வர்த்தகரான குறித்த மாணவரின் தந்தையும் கைதுசெய்யப்பட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...