follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுவெலிசர விபத்து - தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

Published on

நேற்றைய தினம் வெலிசர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பகுதியில் நேற்று (04) கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிளையும் முச்சக்கரவண்டியொன்றையும், கார் ஒன்றையும் மோதி விபத்துக்குள்ளாக்கியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்தனர்.

விபத்துக்கு காரணமான அதிசொகுசு காரை செலுத்திய 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதுடன், வர்த்தகரான குறித்த மாணவரின் தந்தையும் கைதுசெய்யப்பட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...