நேற்றைய தினம் வெலிசர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பகுதியில் நேற்று (04) கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிளையும் முச்சக்கரவண்டியொன்றையும், கார் ஒன்றையும் மோதி விபத்துக்குள்ளாக்கியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்தனர்.
விபத்துக்கு காரணமான அதிசொகுசு காரை செலுத்திய 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதுடன், வர்த்தகரான குறித்த மாணவரின் தந்தையும் கைதுசெய்யப்பட்டார்.