நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என்றும் அதனை முழுமையாக மூடிவிடுமாறும் வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
நாளை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முன்னர் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபைக்கு வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டாம் என்றும் , அதனை மூடுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதும் பின்னர் இரத்து செய்வதற்கும் மாத்திரமே இருக்கிறது. இதனை செய்து கொண்டு பொது மக்களின் வரிப்பணத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை ஊழியர்களுக்கு ஊதியமளிப்பது பிரயோசனமற்றது.
தற்போது வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறெனில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.