follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனக ரத்நாயக்கவைக் கொலை செய்ய ஒப்பந்தமா?

ஜனக ரத்நாயக்கவைக் கொலை செய்ய ஒப்பந்தமா?

Published on

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக திட்டமிட்ட குற்றக் கும்பல் ஒன்று 15 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் பதுங்கியிருக்கும் ப்ளூமண்டல் சங்கா இவ்வாறு கப்பம் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

நேற்று(16) காலை 7.10 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் ப்ளூமண்டல் சங்கா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரொருவரிடம் தன்னை கொலை செய்ய 80 இலட்சம் ரூபா கூலி கொடுக்கப்பட்டதாகவும் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாது தனக்கு 15 இலட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் தொலைபேசியில் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி அழைப்பின் பிரகாரம் முறைப்பாட்டாளர் ஜனக ரத்நாயக்க தனது அலுவலகத்தில் உள்ள பணத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவை தன்னை அழைத்த நபரிடம் ஒப்படைக்குமாறு பணியாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...