follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுஓய்வை அறிவித்தார் பிராவோ

ஓய்வை அறிவித்தார் பிராவோ

Published on

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் முடிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ உறுதி செய்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் அணித் தலைவர் கீரன் பொல்லார்ட், பிராவோ தனது இறுதி டி-20 போட்டியை கரீபியனில் விளையாடியதாக அறிவித்தார்.

நேற்றையதினம் இலங்கை அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து, ஐ.சி.சி.யின் போட்டிக்கு பிந்தைய முன்னாள் அணித் தலைவர் டேரன் சமி மற்றும் வர்ணனையாளர் அலெக்ஸ் ஜோர்தனுடனான உரையாடலில் தனது ஓய்வை பிராவோ உறுதிப்படுத்தினார்.

18 வருடகால கிரிக்கெட் வாழ்வில் 38 வயதான பிராவோவின் இரண்டு முறை டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் ஒரு உறுப்பினராக இருந்துள்ளார்.

அதேநேரம் ஏழு டி-20 உலகக் கிண்ண தொடர்களில் விளையாடியுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 90 டி-20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தி 1000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

சீம்-பவுலிங் ஆல்-ரவுண்டர் 2004 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், ஒட்டுமொத்த கிரிக்கெட் வடிவில் 500 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...