சர்வதேச ரீதியில், கொவிட் தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கிய முதலாவது நாடாக பிரித்தானியா பதிவாகியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரட்ஜ்பெக் பயோதெரபியூடிக்ஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து இந்தக் கொவிட் தடுப்பு மாத்திரையைத் தயாரித்துள்ளன.
இந்நிலையில், கொவிட் தடுப்பு போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் ஒளடத மற்றும் சுகாதார உற்பத்திகள் ஒழுங்குபடுத்தல் நிறுவகத்தால், நேற்று (04) இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.