follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP1"நான் இறக்கும் வரைக்கும் அரசியலில் ஈடுபடுவேன்" - முன்னாள் ஜனாதிபதி

“நான் இறக்கும் வரைக்கும் அரசியலில் ஈடுபடுவேன்” – முன்னாள் ஜனாதிபதி

Published on

தான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியின் முன்னோக்கி செல்லும் பாதையில் செல்ல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்தினார். நீண்ட காலமாக இலங்கை அரசியலில் முக்கிய பங்கை வகித்த முன்னாள் ஜனாதிபதி, அரசியல் களத்திற்கு பங்களிப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்தை மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தேர்தல் போட்டியில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிட்ட நபர் தொடர்பில் கட்சி முடிவெடுக்கவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 – 2029 தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில்...

மேர்வின் சில்வா ஏப்ரல் 21 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான்...

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த...