இன்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த மோட்டர் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதுடைய சிறுவன் ஒருவனே குறித்த அதிசொகுசு வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.