follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களுக்கு கொரோனா கொத்தணிகள் உருவாவதை தடுக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா கொத்தணிகள் உருவாவதை தடுக்க நடவடிக்கை

Published on

கொரோன தொற்றுடன் பாடசாலை மாணவர்கள் சிலர் அடையாளம் காணப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதுள்ளதாகவும் இது குறித்து தொற்று நோய் ஆய்வு பிரிவு ஆராய்ந்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுடன் அதிகமான மாணவர்கள் அடையாளம் காணப்படும் பாடசாலைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை பிரதேச மட்டத்தில் எடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுக்கவுள்ளதாகவும் இதனூடாக கொத்தணிகள் உருவாவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எனினும் இதனை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது என பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...