பொலிஸாரின் காவலில் உள்ள கனேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ சமரத்னவை பொலிஸ் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட சில பொலிஸ் குழுக்களின் கட்டுப்பாட்டில் வைப்பதைத் தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி அவரது தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவ தற்போது வீரகுள பொலிஸாரின் காவலில் உள்ளதாகவும், தனது மகனை விசாரணைக்காக பிரதிவாதி அதிகாரிகளின் காவலில் மாற்றினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.