follow the truth

follow the truth

September, 28, 2024
HomeTOP1🔴LIVE UPDATE மின்சார சபை ஊழியர் போராட்டம் : சில இடங்களில் விநியோகத்தில் தடை?

🔴LIVE UPDATE மின்சார சபை ஊழியர் போராட்டம் : சில இடங்களில் விநியோகத்தில் தடை?

Published on

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்து வரும் நிலையில், சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

தாம் போராட்டத்தை முன்னெடுக்கும் போது விநியோகத் தடை ஏற்பட்டால் அதனை சரிசெய்யப் போவதில்லை என மின்சார சபை ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சில இடங்களில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்த்து மக்களும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதானவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி இன்க் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுமாறும் அதன் விவரங்களை வெளியிடுமாறும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருமான வரி செலுத்துவது தொடர்பான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும்...

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட...

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் அழைப்பு

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்...