follow the truth

follow the truth

September, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாடிரானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

டிரானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Published on

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் கையளிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல உள்ளிட்ட சுதந்திர மக்கள் சபை எம்.பி.க்கள் குழுவொன்றே இவ்வாறு தயாராகி வருகின்றது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவளிப்பதாக லலித் எல்லாவல தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் படுகொலைகளை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு தமது குழுவினர் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், காலம் கடந்தாலும் நாட்டில் குற்றச்செயல்கள் அப்படியே இருப்பதாகவும் லலித் எல்லாவல எம்.பி தெரிவித்தார்.

இதன் காரணமாக பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் கையளிப்பதாகத் தெரிவித்த எல்லாவல, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு போதுமான உண்மைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...