follow the truth

follow the truth

March, 21, 2025
HomeTOP1வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது

வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது

Published on

பல ஆறுகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அவதானம் செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த ஆறுகளை அண்மித்து வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகள் மற்றும் புறவழிச்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்த ஆறுகளில் மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி ஆற்றின் நீரின் ஓட்டம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், அவிசாவளையின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் சில இடங்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...