follow the truth

follow the truth

April, 2, 2025
Homeவிளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து பியான்கா விலகல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து பியான்கா விலகல்

Published on

கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்பட பலர் விலகியுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் பல வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை கனடாவை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காதது மிகவும் கடினமான முடிவு. நான் சிறுமியாக இருந்தபோதே ஒலிம்பிக்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என் கனவாக இருந்தது. ஆனால் தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து சவால்களும் என் இதயத்தில் ஆழமாக இருப்பதை நான் அறிவேன். இது எனக்கு நானே எடுக்கும் சரியான முடிவு. எதிர்கால ஃபெட் கோப்பை போட்டிகளில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தவும், பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடுவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா...

சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தோனி

ஐ.பி.எல் தொடரின் 8-வது தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல்...

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும்...