கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் விடவும் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஐக் கடந்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மனி, கஸகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளும் இலங்கை வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.