follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மக்களே எமக்குத் தர வேண்டும் : பசில்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மக்களே எமக்குத் தர வேண்டும் : பசில்

Published on

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​’நாங்கள் மக்களிடம் இருந்து பெறப்போவதில்லை, மக்களிடம் இருந்து எடுக்கப் போகிறோம்’ என்றார்.

இதன்படி, இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் மீது அதிக வரிச்சுமை ஏற்படும் என நிதியமைச்சர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மல்வானையில் உள்ள சொகுசு வீடு தொடர்பான வழக்கில் நேற்று (01) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மல்வானையில் உள்ள சொகுசு வீடு, ஒப்பந்ததாரர் ஒருவரை பயன்படுத்தி பசில் ராஜபக்ஷ கொடுத்த பணத்தில் கட்டப்பட்டதாக வழக்கின் சாட்சியான முதித உபாலி ஜெயக்கொடி நேற்று (01) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்த முதித உபாலி ஜயக்கொடி, ஒப்பந்தக்காரரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒப்பந்ததாரரிடம் பணத்தை வழங்கியபோது, ​​அதற்கான ரசீதுகளும் கிடைத்ததாகவும், அவை தனது நிறுவனத்தின் ரசீதுகள் என்பதை ஏற்றுக்கொண்டதாகவும் சாட்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

தொம்பே மல்வான பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து அங்கு வீடு மற்றும் நீச்சல் தடாகம் அமைத்து அரச நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையர்கள் ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள்...