follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP2உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடாமை மற்றும் பல்வேறு இலத்திரனியல் மற்றும் அச்சு மூலம் பொய்யான தகவல்கள் தொடர்பில் இந்த சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள், இந்த நாட்களில் ஊடகவியலாளர்கள் குறித்த சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்காமை தொடர்பில் விளம்பரங்கள் இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் சரியான நிலைமையை இந்த கௌரவ சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியின் செயலாளர் 03/03/2022, 14/03/2022 திகதியிட்ட கடிதத்தில், சம்பந்தப்பட்ட சாட்சிகளின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு திறக்க முடியாது. பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் 09/12/2023 கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பதை இந்த கௌரவ சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...