follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1நாட்டை விட்டு வெளியேறிய தாதிக்கு 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்படமை குறித்து விசாரணை

நாட்டை விட்டு வெளியேறிய தாதிக்கு 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்படமை குறித்து விசாரணை

Published on

ஹதரலியத்த பிரதேச வைத்தியசாலையில் பணிபுரிந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக பணிக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்ற தாதி ஒருவருக்கு சம்பளமாக 03 இலட்சம் ரூபாவை வழங்கிய சம்பவம் தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தாதியர் கடந்த மார்ச் மாதம் திடீரென வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூரில் தாதியராக வேலைக்குச் சென்றது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியொருவர் நடத்திய விசாரணையில் தெல்தெனிய வைத்தியசாலையில் இருந்து ஹதரலியத்த வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி, சேவையிலிருந்து விலகுவதாக நிர்வாகத்திற்கு அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

சேவையில் இருந்து விலகி வெளிநாடு சென்று சுமார் மூன்று மாதங்கள் ஆன நிலையில் குறித்த தாதியின் மாதாந்த சம்பளம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு செய்த போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகாவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹதரலியத்த வைத்தியசாலையின் ஊழியர்கள் பலரிடமும் மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளின் சம்பள கொடுப்பனவு தொடர்பான ஆவணங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் குழுவிடமும் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து மீளப்பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக...