புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையினுள் பரவுவதனை தடுக்கும் வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த திரிபானது தற்போது பயன்படுத்தப்படும் எந்தவொரு கொவிட் தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது பொதுமக்களில் சிலர் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கும் நிலைமை குறைவடைந்து வருவதால் எதிர்காலத்தில் இந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழையுமாயின், அது எளிதில் பரவலடையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, இவ்வாறாக சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது மாத்திரமே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாம் செய்யவேண்டிய அல்லது செய்யக்கூடிய ஒரேயொரு பாதுகாப்பு முறையாகும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஏனெனில், பூரணமாக கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள்கூட இந்தத் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.