follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுபுதிய வகை கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவக்கூடும்

புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவக்கூடும்

Published on

புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையினுள் பரவுவதனை தடுக்கும் வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த திரிபானது தற்போது பயன்படுத்தப்படும் எந்தவொரு கொவிட் தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது பொதுமக்களில் சிலர் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கும் நிலைமை குறைவடைந்து வருவதால் எதிர்காலத்தில் இந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழையுமாயின், அது எளிதில் பரவலடையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறாக சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது மாத்திரமே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாம் செய்யவேண்டிய அல்லது செய்யக்கூடிய ஒரேயொரு பாதுகாப்பு முறையாகும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏனெனில், பூரணமாக கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள்கூட இந்தத் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...